அன்புமணிக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூடத் தெரியாது. ! அமைச்சர் துரைமுருகன் பதிலடி..



பாமக அன்புமணி இராமதாஸ், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என தமிழ்நாடு முழுக்க நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் வேலூர் மாவட்டத்திற்குச் சென்ற அன்புமணி, பா.மகா.பொதுக்கூட்டதில், இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரை நான் கேட்கிறேன். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா.? என்று தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.
அன்புமணிக்கு பதில் அளித்துள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “அன்புமணி, கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்குக் கொஞ்ச நஞ்ச விவரம் கூடத் தெரியாது என்று நிரூபித்திருக்கிறார் எனத் தெரிவித்து, பாலாற்றில் எங்கெங்கு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த அன்புமணி தன்னுடைய தந்தையான டாக்டர் அய்யாவை எதிர்த்து ரத கஜ துரக பதாதிகளுடன் தமிழகத்தில் திக்விஜயம் செய்யப் புறப்பட்டிருக்கிறார். இதுகுறித்து கருத்து சொல்ல நமக்கு உரிமையில்லை. நாம் சொல்லப் போவதுமில்லை. ஆனால், இந்த திக்விஜயத்தில் நேற்று வேலூர் பொதுக்கூட்டத்தில் போர்ப் பிரகடனம் செய்திருக்கிறார்.
அவர் பேசுகிற போது, என்மீது ஒரு சிறிய பாசமழையைப் பொழிந்துவிட்டு, அதே வேகத்தில் நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளைக் குறித்து விவரம் தெரியாமல் என்னுடைய அமைச்சர் பணியைக் குறித்துக் கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார்.
அதாவது, இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரை நான் கேட்கிறேன். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா.? என்று முழக்கமிட்டிருக்கிறார்.
அன்புமணி, கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்குக் கொஞ்ச நஞ்ச விவரம் கூடத் தெரியாது என்று நிரூபித்திருக்கிறார்.
தலைவர் கலைஞர், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது தான் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகின்ற பணியை ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக, நான் இந்த துறைக்கு அமைச்சராக, கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டத்திலும், மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிற இந்த காலத்திலும், பாலாற்றில், இறையங்காடு, பொய்கை சேண்பாக்கம், அரும்பருத்தி, திருப்பாற்கடல், கவுண்டன்யாநதியில், ஜங்காலப்பள்ளி, செதுக்கரை பொன்னையாற்றில், பரமசாத்து- பொன்னை குகையநல்லூர், பாம்பாற்றில், மட்றப்பள்ளி, ஜோன்றாம்பள்ளி, கொசஸ்தலையாற்றில், கரியகூடல், அகரம் ஆற்றில் கோவிந்தப்பாடி, மலட்டாற்றில், நரியம்பட்டு, வெள்ளக்கல் கானாற்றில் பெரியாங்குப்பம் கன்னாற்றில், சின்னவேப்பம்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கிறேன்.
இந்த ஆண்டு, அம்பலூர், பாப்பனபள்ளி – செங்குனிகுப்பம், அம்முண்டி, வெப்பாலை ஆகிய இடங்களில் தடுப்பணைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அன்புமணிக்கு ஒரு சிறிய வேண்டுகோள். இனிமேலாவது பேசுவதற்கு முன் யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது என பதிலடி கொடுத்துள்ளார்.


banner

Related posts

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது

Admin

அரசின் திட்டங்கள், திட்ட விளம்பரங்களில் முதலமைச்சரின் பெயர் முன்னாள் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தக்கூடாது – சி.வி சண்முகம் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Ambalam News

தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலக்கினார் .?

Ambalam News

Leave a Comment