தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கிறது.
தவெக விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து நாள் தோறும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் கொலை கொள்ளை என தமிழக மக்கள் பீதியில் தத்தளித்து வருகின்றார்.
முதல்வர் விஜய் அரசின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கையில் கதறல் சத்தம் கேட்குதா CM என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகையை காட்டியபடி சட்டசபைக்கு வந்துள்ளது மக்களின் குரலை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எதிரொலிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவெக அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
ஆளுநர் உரையுடன் சட்டசபை தொடங்கியுள்ளது.

