இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் | இரயில் முன் பாய்ந்த திரு. சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இரங்கல்


இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்ததோடு உரிய சிகிச்சைக்கு உத்தரவிட்டிருந்தார்.. சிகிச்சை பலனின்றி சிவா திலீபன் உயிரிழந்திருக்கிறார். அவரது மரணத்திற்கு மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது.

மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!

இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் – தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன்.என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.


banner

Related posts

தமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் | டிஜிபி வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு

Ambalam News

நாயை துப்பாக்கியால் சுட முயற்சிசிறுவன் மீது பாய்ந்த குண்டு

Admin

ரீல்ஸ் அட்ராசிட்டி எஸ்.ஐ.இசக்கிராஜாவின் துப்பாக்கி அப்பாவி மக்கள் பக்கம் திரும்பியுள்ளது – எஸ்.ஐ.இசக்கிராஜாக்கு எதிராக ஆலங்குளத்தில் வெடித்த போராட்டம்..

Ambalam News

Leave a Comment