2026 தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் எதிரொலியாக பல ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிட மாறுதல் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமனை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உள்ளது. அவருக்கு பதில் சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை பொறுப்பேற்க உள்ளார்.

