இசைஞானிக்கு பாராட்டு விழா, நினைவு பரிசு – முதல்வரை கொண்டாடும் ராஜாவின் ரசிகர்கள்.. இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் – முதல்வர் முக. ஸ்டாலின் கோரிக்கை


தமிழ் திரையுலகில் ‘’இசைக்கு நாயகன்’’ என்றால் அது இளையராஜாதான். இசையில் மர்ம ஜாலங்களை நிகழ்த்தி ரசிகர்களின் மனதை கட்டிப்போட்ட மாயக்காரர். எல்லாமே எவர்க்ரீன் பாடல்கள்தான். எத்தகைய சுழலுக்கும் ஏற்ற பாடல்கள், எத்தகைய சோகங்களையும் மறக்கடிக்கும் இன்னிசை கீதங்கள், சொல்லப்போனால் நானெல்லாம் இரவில் ராஜாவின் பாட்டு கேட்காமல் தூங்கியதே இல்லை. இளையராஜாவின் பாடல்கள் எனக்கு தாலாட்டு கீதங்கள், இசைப்பிரியர்களை இசையால் கட்டிப்போட்ட ஞானி. அதனால்தான் கலைஞர் கருணாநிதி இவருக்கு இசைஞானி என்ற படத்தை கொடுத்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். கடல் கடந்தும் ரசிக்கப்பட்ட அவரது பாடல்களும், இசையும் மக்களுக்கு மட்டுமானது அல்ல ‘’இந்த பூவுலகிற்கான தாலாட்டு’’ என்றே எண்ணுகிறேன். அப்படிப்பட்ட இசை, பாடல்களை இந்த உலகிற்கு கொடுத்த இளையராஜாவுக்கு இன்னும் எத்தனை பாராட்டு விழாக்கள் எடுத்தாலும் வியப்போன்றும் இல்லை. ஆனால் இத்தனை அரசியல் நெருக்கடிகளுக்கும் மத்தியில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இளையராஜாவுக்கு விழா எடுக்க வேண்டும் இந்த எண்ணம் தோன்றியாது கண்டு வியந்தேன். அவருக்கு விழா எடுத்ததற்கு ராசாவின் ரசிகர்களின் சார்பில், ‘’அம்பலம் புலனாய்வு செய்திக்குழு’’ இணையதள ஊடகம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றிகளை காணிக்கையாக்குகிறது.


தமிழக அரசு சார்பில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு-50 பாராட்டு விழா’ சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு இந்த பாராட்டு விழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்துள்ளார். அவரது சாதனைகளை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு-50’ பாராட்டு விழா’ சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
விழாவில் தலைமை உரை நிகழ்த்தி முதல்வர் பேசியதாவது: ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா. நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா. இசை எனும் தேனை உலகத்துக்கே தரும் இந்த தேனிக்காரரை பாராட்ட இங்கு கூடியிருக்கிறோம். அவர் கலைத்தாய்க்கு மட்டுமின்றி, தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவர். அதனால்தான், தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்ட இந்த மனிதர், திறமையும், உழைப்பும் இருந்தால், எப்பேர்ப்பட்ட உயரங்களையும் அடையலாம் என்று, அனைத்து மனிதர்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இவர் மொழிகள், நாடுகள், எல்லைகளைக் கடந்த ராஜா. அனைத்து மக்களுக்குமானவர். இளையராஜாவை பற்றி, வலைதளத்தில் ஒருவர் எழுதிய சில வரிகளை சொல்ல விரும்புகிறேன். இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால் திருக்குறளும் – நற்றிணையும் – புறநானூறும் – குறுந்தொகையும் – ஐங்குறுநூறும் – பதிற்றுப்பத்தும் – பரிபாடலும் – சிலப்பதிகாரமும் – எங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும் என்று எழுதியிருந்தார். நானும் இதையேதான் தமிழ் ஆர்வலராக உங்களிடம் கோரிக்கையாக வைக்கிறேன். சங்கத்தமிழுக்கு, தமிழ் இலக்கியங்களுக்கு நீங்கள் இசையமைத்து சில ஆல்பங்களை வெளியிடவேண்டும்.
இசையால், நம் நெஞ்சங்களை ஆளும் இளையராஜாவுக்கு, எத்தனையோ புகழ் மகுடங்கள், பாராட்டு மாலைகள், பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற பட்டங்கள் இருந்தாலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கிய ‘இசைஞானி’ பட்டம் அவரது பெயராகவே நிலைத்துவிட்டது.
இசைத்துறையில், ஆர்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசின் சார்பில், இனி ஒவ்வொரு ஆண்டும் ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது வழங்கப்படும்.


இசைத் துறையில் பல சாதனைகள் படைத்த, பல சிகரங்களை தொட்ட இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’விருது வழங்கப்பட வேண்டும் என்ற ஆவலை, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களின் சார்பில் தெரிவிக்க விரும்புகிறேன். இது நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறேன். உங்கள் பயணம் இன்னும் பல்லாண்டுகாலம் தொடர வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நடிகர் ரஜினியின் பேச்சு நகைச்சுவையாக இருந்தது. நிறைவாக, இளையராஜா ஏற்புரை நிகழ்த்தினார். அமைச்சர்கள், அதிகாரிகள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்த பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ந்து இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவை முன்னெடுத்த முதல்வரை, இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல்வர் கூறியது போலவே அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


banner

Related posts

எடப்பாடி பழனிச்சாமியுடன் மல்லுக்கட்டு – ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை.!?

Ambalam News

தமிழகத்தை போன்று ”பஞ்சாபில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிப்பேன்” – பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

Ambalam News

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த இராமநாதபுரம் ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்

Admin

Leave a Comment