மின்சாரம் துண்டிப்பு : தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, ஆதாரத்தை வெளியிட்ட நாகை திமுக..


திமுக திருச்சி அரியலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டத்தில் இன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது, பேசிய விஜய், அரியலூரில் நான் பேசும்போது மின்சாரம் தடைபட்டது. திருச்சிக்கு சென்று நான் பேச ஆரம்பித்த பிறகு ஸ்பீக்கருக்கு செல்லும் வயர் கட்செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தலைவரோ, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இங்கு வந்துபேசும்போது இம்மாதிரி நிபந்தனைகளைப் போடுவீர்களா.? மின்சாரத்தை தடை செய்வீர்களா.? அப்படி கட் செய்துதான் பாருங்களேன். பேஸ்மெண்ட் ஆடிவிடாதா.? என்றுபேசினார்.

தனது பிரச்சாரத்தின் போது திட்டமிட்டே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்கிற ரீதியில் பேசிய விஜய்யின் பேச்சை கண்டித்து நாகை திமுக எக்ஸ் பக்கத்தில், பதிலடி கொடுத்துள்ளது
நாகப்பட்டினம் தவெக மாவட்ட தலைவர், விஜய் தேர்தல் பரப்புரைக்கு வருவதால் மின் விபத்துகளை தடுக்கும் நோக்கில், மின்சாரத்தை துண்டிக்கும்படி மேற்பார்வை பொறியாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
நாகையில் பிரச்சாரத்தின் போது, மின் விபத்துகளை தடுக்கும் நோக்கில், மின்சாரத்தை துண்டிக்கும்படியும் விஜய் வரும் வழியில் மின்சாரத்தை துண்டிக்கும்படியும் அக்கடிதத்தில் கூறியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில், விஜய்யின் பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக முதல்வர் மின்சாரத்தை துண்டிக்க கூறியது போல் பேசுவது கண்டிக்கதக்கது என்றும், இனி இவ்வாறு பேசினால் ஆதாரங்களை வெளியிட வேண்டியிருக்கும் என்கிற ரீதியில் நாகை திமுக சார்பில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பரிபாலன் கடித ஆதாரத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தவெக தலைவர் விஜய்யின் பேச்சை கண்டித்திருக்கிறார்.


banner

Related posts

தவெக விஜய் மாநாட்டுக்கு சென்றவர் மர்ம மரணம்.? 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு – நடந்தது என்ன.?

Ambalam News

திருவண்ணாமலை கோவில் கோபுரம் முன்பு காம்ப்ளக்ஸ் கட்டும் வழக்கில் நீதிபதிகள் அறநிலையத்துறைக்கு கண்டனம் – சரமாரி கேள்வி..

Ambalam News

அதிமுக எக்ஸ் எம்.பி.மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.? அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழும் என்று திமுகவினர் கருத்து.

Ambalam News

Leave a Comment