சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை – இளைஞர் போக்ஸோவில் கைது


இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் வசித்து வரும் சிறுமி ஒருவருக்கு பிரவீன்குமார் என்ற இளைஞர் தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் பலமுறை இளைஞர் பிரவீன் குமாரை கண்டித்தும், அவர்களை பொருட்படுத்தாமல், தொடர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை கொடுத்து அட்டகாசம் செய்து வந்துள்ளார்.
இளைஞரின் பாலியல் தொல்லை அதிகரித்ததால், அந்த சிறுமியின் தாயார் நெமிலி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனை தொடர்ந்து, அந்த புராரின் பேரில், விசாரணை செய்த போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் பிரவீன் குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பனப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


banner

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு.? மருத்துவ ஆய்வு மேற்கொள்ள வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Ambalam News

‘’ஆபரேஷன் அகால்’’ இராணுவத்தின் தேடுதல் வேட்டை – 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. தொடரும் தேடுதல் வேட்டை…

Ambalam News

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது

Ambalam News

Leave a Comment