லண்டன்: பெரியாரின் சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது, மானிடச் சமுதாயத்திற்கானது.! உலக மக்களுக்கு பொதுவானது! அதுதான் பெரியாரியம்! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!



தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். சுற்றுப்பயணத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து பெரியாரியம் குறித்து உரையாற்றியுள்ளார்.
தமிழ்நாட்டிற்காக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒரு வார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் 30 ஆம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக ஜெர்மனி சென்றார்.
அங்கு, நடைபெற்ற ‘டிஎன் ரைசிங் ஜெர்மனி’ என்னும் முதலீட்டார்கள் மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி, அங்குள்ள தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் செப்டம்பர் 2 ஆம் தேதி ஜெர்மனி சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். லண்டன் விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, “பல நூறு ஆண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக்த்தில் உரையாற்றுவதில் பெருமையடைகிறேன். திமுகவின் தலைவர் என்பதைவிட பெரியாரின் பேரன் என்கிற கம்பீரத்தோடு உங்கள் முன் பேசுகிறேன்.
சமூகநீதி என்பதை தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுதும் கொண்டு சென்றவர் பெரியார். பழமைவாதங்களும், பிற்போக்குத்தனமான கருத்துக்களும் சமூகத்தில் இருந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பே முற்போக்குக் கருத்துக்களை பேசிய பெரியாரின் உருவப்படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் திறந்து வைத்திருக்கிறேன். பெரியார் உலகமயமாகிறார், உலகம் மனிதாபிமானத்தை தழுவட்டும்” ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த தந்தை பெரியாரை இன்றைக்கு உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை!
தந்தை பெரியாருக்கு மிக மிகப் பிடித்த சொல் என்ன என்று கேட்டீர்கள் என்றால், சுயமரியாதை.! மனிதனின் சுயமரியாதையைக் காக்கத்தான் அனைத்து அரசியல் தத்துவங்களும் தேவை என்று சொல்லி, தான் உருவாக்கிய இயக்கத்துக்கே சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார்.
தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தார். தமிழில் பேசினார். ஆனால் அவருடைய சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது, மானிடச் சமுதாயத்திற்கானது.! உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது! அதுதான் பெரியாரியம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்தப்பின் பேசினார்.


banner

Related posts

தமிழ்நாட்டில் ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.! தமிழ்நாடு அரசு உத்தரவு

Ambalam News

புதுச்சேரியில் ரங்கசாமியுடன் தவெக கூட்டணி என்று வதந்தி – புஸ்லி ஆனந்த் அறிக்கை

Ambalam News

டெல்லி பாஜக தலைவர்கள் கூட்டம்: கல்யாண நிகழ்ச்சிகள் இருக்கு.! அதனால் டெல்லி போகவில்லை.!!! – அண்ணாமலை

Ambalam News

Leave a Comment