பிரதமர் மோடி ஜப்பான், சீனாவிற்கு இன்று பயணம்..!


பிரதமர் மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று செல்கிறார். இருநாட்டு தலைவர்களையும் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தியா-ஜப்பான் 15 வது வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ஜப்பான் செல்கிறார். நாளை ஜப்பானில் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இந்தியா, ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு 8 வது முறையாக ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு வரும், 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி சீனா செல்கிறார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டின் ஒருபகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட பல உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பை மேற்கொள்ள இருக்கிறார். 2018 இந்தியா, சீனா படைகள் இடையே, நடந்த மோதலுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக சீனா செல்கிறார்.


banner

Related posts

‘’உங்களுடன் ஸ்டாலின் முகாம்’’ – முதியவர் மீது வருவாய்துறை அதிகாரிகள் போலீஸ் தாக்குதல்.. மாவட்ட ஆட்சியர் விசாரிப்பாரா.?

Ambalam News

‘’மாமூல் வாங்குறதுக்கு.. பிச்சை எடுத்து சாப்பிடலாம்’’ மாமூல் போலீசாருக்கு டோஸ் விட்ட கடலூர் எஸ்பி.ஜெயக்குமார்

Ambalam News

50 சீட் கேட்கும் பாஜக..!? அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி.? செங்கோட்டையனின் பகீர் அரசியல்.??

Ambalam News

Leave a Comment