பீகாரில் நடந்த வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி போராடி வருகிறார். இந்த வாக்கு திருட்டு விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வாக்கு திருட்டு விவகாரத்தை கண்டித்து பீகாரில் யாத்திரை தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையில் வரும் 26, 27-ஆம் தேதிகளில் பிரியங்காவும், 27-ஆம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ஆம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
Related posts
Click to comment