ஆளுநரின் தேநீர் விருந்து – நாங்க வரல.! திமுக… நாங்களும் வரல – திமுக கூட்டணிக் கட்சிகள்..!



வாங்களேன் ஒரு டீ சாப்டுகிட்டே பேசுவோம்.. அதெல்லாம் தேவையில்ல.. நாங்க வரல.. என்னைக்கும் உங்களுக்கும் எங்களுக்கும் ஒத்து வராது… நாங்க நல்லாருக்கணும்ன்னு நீங்க நினைக்கல..உங்க டீய நீங்களே குட்டிச்சுக்கோங்க..நான் மட்டுமில்ல எங்க ஆளுங்க யாருமே வரமாட்டாங்க இந்த மாதிரி கதையாகத்தான் நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கும் தேநீர் விருந்து கதையும்.. இருக்கிறது. ஆளுநர இப்படியெல்லாமா சங்கடப்படுத்துவீங்க.? என்ற கேள்வியும் பரபர பேசுபொருளாகியிருக்கிறது.
இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்க போவதில்லை என்று திமுக கூட்டணிக்கட்சிகள் ஏற்க்கனவே அறிவித்து விட்டன. தற்போது, ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்துள்ளது.
இதையடுத்து ஆளுநர் தலைமையில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களிலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேர்க்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து செயல்பட்டுவரும் ஆளுநர் திரு.ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 18.8.2025 மற்றும் 19.8.2025 ஆகிய நாட்களில் நடைபெறும் இரண்டு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் முதலமைச்சர் அவர்களின் அறிவுத்தலின்படி பங்கேற்கப் போவதில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா முறையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு, குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதுமட்டுமன்றி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழகங்களின் சட்டம் தொடர்பாக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைப் பெற்ற பின்பு பாஜக நிர்வாகி குட்டி (எ) வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை பெற்றார். அந்தத் தடையாணையினை நீக்கிட உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு அணுகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில், ஆளுநர் அவர்கள், மேற்படி பா.ஜ.க. பிரமுகர் தெரிவித்த கருத்துக்களை ஆதரிக்கும் வகையில் முந்திக்கொண்டு போய் வாதுரை தாக்கல் செய்துள்ளார். இது அவரது அரசியல் சார்பு தன்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுவதோடு, அவரது ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கும் இது ஒரு உதாரணமாக விளங்குகிறது.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் நிலைமைக்கு ஆளுநர் அவர்களின் செயல்பாடுகளும், அவர் போட்டு வரும் முட்டுக்கட்டைகளும் தான் காரணம்.
இந்தச் சூழ்நிலையில் முதலமைச்சர் அவர்கள் 15.8.2025 அன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார். மேலும், முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தானும் 18.8.2025 மற்றும் 19.8.2025 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.


banner

Related posts

திருச்சி அரசு மருத்துவமனை – போதுமான வசதிகள் இல்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு

Admin

என்கவுண்டர்: எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை… கொலையாளியை என்கவுண்டர் செய்தது போலீஸ்

Ambalam News

அரசின் திட்டங்கள், திட்ட விளம்பரங்களில் முதலமைச்சரின் பெயர் முன்னாள் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தக்கூடாது – சி.வி சண்முகம் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Ambalam News

Leave a Comment