ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு..


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தமிழக போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. இந்த கொலையில் சில அரசியல் புள்ளிகளை காவல்துறை விசாரிக்கவில்லை திருவேங்கடம் என்கவுன்டர் குறித்து முறையாக விசாரிக்கப்பட்டவில்லை என்று தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களால் தமிழக காவல்துறை மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது வந்தது.

இந்நிலையில், ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்​றி​யுள்ள உயர் நீதி​மன்​றம், எந்​தவொரு அரசி​யல் தலையீடும் இல்​லாமல் விசா​ரித்து 6 மாதங்​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய வேண்​டுமென அறி​வுறுத்​தி​யுள்​ளது.

பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக பதவி வகித்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்​தாண்டு ஜூலை 5-ம் தேதி பெரம்​பூரில் உள்ள தனது வீட்டருகே காட்டப்படும் புதிய வீட்டின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு கும்​பலால் கொடூரமாக வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்​டார்.

இந்த வழக்​கில் சிறை​யில் உள்ள தண்டனைக் கைதியும், பிரபல ரவுடி நாகேந்​திரன், அவரது மகனும், முன்​னாள் இளைஞர் காங்​கிரஸ் நிர்​வாகி​யு​மான வழக்​கறிஞர் அஸ்​வத்​தாமன், ரவுடி ஆற்​காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கஞ்சா வியாபாரி அஞ்​சலை, மற்றும் பல்​வேறு அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்தவர்​கள், 10 வழக்​கறிஞர்​கள், பெண்​கள் என மொத்​தம் 27 பேர் இந்த கொலை வழக்கில் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்கப்பட்டுள்​ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திரு​வேங்​கடம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்ற போது போலீசாரை தாக்க முயன்றபோது, போலீ​ஸா​ரால் என்​க​வுண்​டர் செய்​யப்​பட்​டார்.

இந்த வழக்​கில் தொடர்ந்து தலைமறை​வாக உள்ள பிரபல சம்போ செந்​தில் மற்​றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீ​ஸார் கடந்த ஓராண்​டாக தேடி வரு​கின்​றனர். இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​கள் மீது செம்​பி​யம் போலீ​ஸார் 5 ஆயிரம் பக்​கங்​கள் கொண்ட குற்​றப்​பத்​திரி​கையை எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தனர். தற்​போது இந்த வழக்கு விசா​ரணை சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நடந்து வருகிறது.

இந்​நிலை​யில் இந்த வழக்கை போலீ​ஸார் முறை​யாக விசா​ரிக்​க​வில்லை எனக்​கூறி ஆம்​ஸ்ட்​ராங்​ சகோ​தரர் கீனோஸ் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அதில், ஒரு தேசிய கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக பதவி வகித்த தனது சகோ​தரரின் படு​கொலை வழக்கை செம்​பி​யம் போலீ​ஸார் முறை​யாக விசா​ரிக்​க​வில்​லை.

இந்த கொலை​யில் பல முக்​கிய அரசி​யல் புள்​ளி​களுக்கு தொடர்பு இருக்​கலாம் என்ற சந்​தேகம் உள்​ளது. கொலை​யில் தொடர்​புடைய சம்போ செந்​தில் மற்​றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை பிடிக்க தமிழக போலீ​ஸார் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என மனுவில் கூறியிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்​முரு​கன் முன்​பாக நடந்து வந்​தது. அப்​போது காவல்​துறை தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்.முனியப்​ப​ராஜ், இந்த வழக்​கில் உடனடி​யாக 27 பேர் கைது செய்​யப்​பட்டு அவர்​களுக்கு எதி​ராக குற்​றப்​பத்​திரி​கை​யும் தாக்​கல் செய்​யப்​பட்​டு​விட்​டது. நீதி​மன்​றத்​தில் விசா​ரணை சரி​யான கோணத்​தில் தான் நடந்து வரு​கிறது என வாதிட்டார்.

மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் யோகேஷ் கண்​ணா, இந்த வழக்​கில் முதல் குற்​ற​வாளி​யாக​வுள்ள ரவுடி நாகேந்​திரனுடன் நெருக்​க​மாக இருந்த தமிழக காங்​கிரஸில் முக்​கிய பொறுப்​பில் உள்ள தலை​வரிடம் இது​வரை எந்த விசா​ரணை​யும் நடத்​தப்​பட​வில்​லை.

இந்த வழக்​கில் கைதான திரு​வேங்​கடம் ஏன் என்​க​வுண்​டர் செய்​யப்​பட்​டார் என்​பது குறித்​தும் போலீ​ஸார் தெளிவுபடுத்​த​வில்​லை. பல உண்​மை​களை மறைத்து போலீ​ஸார் அவசரக​தி​யில் குற்றப்​ பத்​திரி​கையை தாக்​கல் செய்​துள்​ளனர். எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்​டும் என வாதிட்​டிருந்​தார். இருதரப்​பிலும் வாதங்​கள் நிறைவடைந்த நிலை​யில் இந்த வழக்​கின் தீர்ப்பு தேதி குறிப்​பி​டா​மல் தள்​ளிவைக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில் நீதிபதி பி.வேல்​முரு​கன் நேற்று பிறப்​பித்​துள்ள தீர்ப்​பில், இந்த வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்​றி​யும், சிபிஐ அதி​காரி​கள் அரசி​யல் குறுக்​கீடோ, ஊடக குறுக்​கீடோ இல்​லாமல் சுதந்​திர​மாக விசா​ரித்து 6 மாதங்​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய வேண்​டுமென உத்​தர​விட்​டார்.


banner

Related posts

திருச்சி : காதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தற்கொலை..

Ambalam News

நீ இங்க படிக்கக் கூடாது.? பழங்குடியின மாணவன் மீது தாக்குதல்.! தலைமையாசிரியர் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

Ambalam News

மெக்டொனால்ட்ஸ் பர்கரில் நெளிந்த புழுக்கள் வாடிக்கையாளர் அதிர்ச்சி.. என்ன செய்கிறது உணவு பாதுகாப்பு துறை

Admin

Leave a Comment