வருமான வரித்துறை சோதனையால் சரணாகதி..இப்போது இது நன்றிக்கான கூட்டணியா.? எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்த கே.சி.பழனிச்சாமி..


எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க சென்றிருக்கும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி குறித்து விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் மத்திய அமைச்சர் கே.சி.பழனிச்சாமி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தன்மானமும், 100 ஆண்டுகளுக்கு மேல் இந்த இயக்கம் ஆட்சியில் இருக்கும் என்று சொன்ன ஜெயலலிதா அம்மா அவர்களின் தன்மானம், ஒவ்வொரு ஊரிலும் தொடர் 10 தோல்விகளால் நொறுங்கி போயிருக்கிற ஒன்றரை கோடி தொண்டர்களின் தன்மானம் இதெல்லாம் தான் ரொம்ப முக்கியம். உங்களுக்கு உங்கள் தன்மானம் தான் முக்கியம் என்றால் நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக சமூக வலைதளப்பதிவில் விமர்சித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என்றால் இந்த முறை ஆட்சிக்கே வரமாட்டோம் என்று முடிவு செய்துவிட்டீர்களா? கட்சி மட்டும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் போதுமா? தனிப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் தன்மானத்தை விட, தோல்வியே காணாத புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தன்மானமும், 100 ஆண்டுகளுக்கு மேல் இந்த இயக்கம் ஆட்சியில் இருக்கும் என்று சொன்ன ஜெயலலிதா அம்மா அவர்களின் தன்மானம், ஒவ்வொரு ஊரிலும் தொடர் 10 தோல்விகளால் நொறுங்கி போயிருக்கிற ஒன்றரை கோடி தொண்டர்களின் தன்மானம் இதெல்லாம் தான் ரொம்ப முக்கியம். உங்களுக்கு உங்கள் தன்மானம் தான் முக்கியம் என்றால்.? நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.
“என்னை யாரும் மிரட்ட முடியாது, ஆட்சியை காப்பாற்றி கொடுத்தது பாஜக தான் அதற்காக தான் கூட்டணி சேர்ந்தேன்” என்று கூறுகிறீர்களே, ஏன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு வேண்டிய நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேறி அவர்களை எதிர்த்து களம் கண்டீர்கள்? அந்த சமயம் அவர்களுடன் கூட்டணியில் இருந்திருந்தால் தமிழகத்தில் NDA கணிசமான தொகுதிகளை பெற்றிருக்கும் மைனாரிட்டி பாஜக அரசு அமைந்திருக்காது அல்லவா?
நாடாளுமன்ற தேர்தலில் திமுக வென்றாலும் பரவாவில்லை என்று கூட்டணியை விட்டு வெளியேறினீர்கள், இப்பொழுதும் திமுக வென்று ஆட்சிக்கு வந்தாலும் பரவாவில்லை தன்மானம் தான் முக்கியம் என்று கட்சியை ஒருங்கிணைக்க மறுக்கிறீர்கள். ஏன் கோடநாடு வழக்கில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது, மற்ற அமைச்சர்கள் மீது ஊழல் நடவடிக்கைகள் ஏதும் எடுக்க கூடாது என்று திமுகவுடன் ஏதேனும் ஒப்பந்தம் போட்டுள்ளீர்களா?
உங்கள் சம்பந்தி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது, உடனே வேலுமணியையும், உங்கள் மகனையும் அமித்ஷாவை சந்திக்க அனுப்பினீர்கள், அவர் ஒரு காலக்கெடு கொடுத்ததும் நீங்களே உடனே சென்று சரணாகதி ஆகி கூட்டணி என்று அறிவித்தீர்கள். இப்போது வந்து எங்களை யாரும் மிரட்ட முடியாது நன்றிக்காக கூட்டணி அமைத்தேன் என்று அவர்கள் திட்டத்தை எல்லாம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் எந்த நன்றிக்காக உங்கள் சம்பந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட நன்றிக்காகவா?
அதிமுகவை ஒன்றுபடுத்தவில்லை என்றால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது உங்களுக்கே புரிகிறது, அது தான் தொண்டர்களின் விருப்பமும். நீங்கள் வேண்டுமானால் தன்மானம் தான் முக்கியம் என்று ஒதுங்கிக்கொள்ளுங்கள் அதற்காக வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற தொண்டர்களின் எதிர்பார்ப்பை நாசமாக்காதீர்கள் என்று தனது சமூக வலைதளப்பதிவில் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி கேட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்.


banner

Related posts

பொன்முடியின் சர்ச்சை பேச்சு.. வீடியோவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

Ambalam News

கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய வழக்கு..கால அவகாசம் கேட்கும் மதுரை ஆதீனம் தரப்பு

Ambalam News

லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா | 20,000 ஆயிரம் லஞ்சம் கேட்டு கையும் களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ கைது

Ambalam News

Leave a Comment