சாதிவாரி கணக்கெடுப்பு பிரதமர் மோடி அடிபணிந்துள்ளார்
– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் பீகார் மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் அம்மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றது.

தெலங்கானாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது தேர்தல் வாக்குறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தடை தொடர்ந்து, தெலங்கானாவில் 1.12 கோடி குடும்பத்தாரிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கை வலுப்பெற்றது. காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையை ஒன்றிய அரசிடம் முன்வைத்து வருகிறது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் பொது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
ஏற்கனவே மாண்புமிகு அம்மாவின் அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.

தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அதிமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
திராவிட மடலுக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் பெருமிதம்
முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் அவசியமான சாதி கணக்கெடுப்பை மறுத்துத் தாமதப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், மத்திய பாஜக அரசு இறுதியாக அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பைச் சாதிவாரியாக நடத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசன் அறிவிப்பில் முக்கிய கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படவில்லை.. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்?
மேலும், இந்த அறிவிப்பு வெளியான நேரமும் தற்செயலானது அல்ல. பீகார் தேர்தல் சமூகநீதி என்பது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இந்த திடீர் நடவடிக்கை அரசியல் நோக்கத்திற்காகவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. ஒரு காலத்தில் எதிர்க்கட்சிகள் சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாகக் குற்றம் சாட்டிய அதே பிரதமர், இப்போது அவர் அந்தக் கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார்.

கொள்கை வகுத்தல், மக்கள் நலன் மற்றும் உண்மையான சமூக நீதியைப் பின்தொடர்வதற்குச் சாதி கணக்கெடுப்பு என்பது ஆப்ஷனல் இல்லை.. அவசியமானது.. அநீதி எந்தளவுக்கு நடந்துள்ளது என்பதைக் கண்டறியாமல் அதைச் சரிசெய்ய முடியாது.
இது தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும் கிடைத்த முக்கியமான வெற்றி. சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் நாங்கள் தான் முதலில் தீர்மானம் நிறைவேற்றினோம். இதை அனைத்து இடங்களிலும் நாங்கள் வலியுறுத்தினோம். பிரதமருடனான ஒவ்வொரு சந்திப்பிலும், பல கடிதங்கள் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம்.. மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினோம்.
மற்றவர்கள் மாநில அளவிலான சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தினாலும்.. நாங்கள் உறுதியாக இருந்தோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்தியப் பட்டியலில் வருவது.. மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு மட்டுமே சட்டப்பூர்வமாகச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும், நடத்த வேண்டும். எங்கள் நிலைப்பாடு இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் கொள்கையால் நடக்கும் எங்கள் சமூக நீதிப் பயணத்தில் திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு மற்றொரு வெற்றி இது” என்று பதிவிட்டுள்ளார்.