10 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..


தவெக தலைவர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைத்த நிலையில், தொடர்ந்து ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு, டாஸ்மாக், மகளிர் உதவித்தொகை, மாணவர்களுக்கான உதவித்தொகை, பேனர் வைப்பு விவகாரங்கள், மக்களுக்கு இடையூராக தவெக நிர்வாகிகள் செய்யும் அட்ராசிட்டி என பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில், தங்களின் நிர்வாகத்தை சரியாக கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது விஜய் தலைமையிலான தவெக அரசு.

அந்த வகையில் தற்போது பால நாயக தேவி ஐ.பி.எஸ், ஜி.தர்மராஜன் ஐ.பி.எஸ் பகேர்லா செபாஷ் கல்யாண் ஐ.பி.எஸ், பி.சரவணன் ஐ.பி.எஸ், ஏ. மயில்வாகனன் ஐ.பி.எஸ் சி. மதன் ஐ.பி.எஸ் உட்பட 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை தங்களது நிர்வாக வசதிக்கு ஏற்றவாறு பணியிட மாற்றம் செய்து விஜய் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


banner

Related posts

தூய்மைப்பணியாளர் வரலட்சுமி மரண விவகாரம் – மின் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமா.? தமிழ்நாடு அரசு..

Ambalam News

போதைபொருள் டீலருடன் நடிகர் கிருஷ்ணா கைது.. சிக்கியது எப்படி

Admin

ஆவின், கோ-ஆப் டெக்ஸ், முதல்வர் மருந்தகங்ளில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் அடையாள அட்டைக்கு பிரத்யேக சலுகைகள் – துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Ambalam News

Leave a Comment