10 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..


தவெக தலைவர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைத்த நிலையில், தொடர்ந்து ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு, டாஸ்மாக், மகளிர் உதவித்தொகை, மாணவர்களுக்கான உதவித்தொகை, பேனர் வைப்பு விவகாரங்கள், மக்களுக்கு இடையூராக தவெக நிர்வாகிகள் செய்யும் அட்ராசிட்டி என பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில், தங்களின் நிர்வாகத்தை சரியாக கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது விஜய் தலைமையிலான தவெக அரசு.

அந்த வகையில் தற்போது பால நாயக தேவி ஐ.பி.எஸ், ஜி.தர்மராஜன் ஐ.பி.எஸ் பகேர்லா செபாஷ் கல்யாண் ஐ.பி.எஸ், பி.சரவணன் ஐ.பி.எஸ், ஏ. மயில்வாகனன் ஐ.பி.எஸ் சி. மதன் ஐ.பி.எஸ் உட்பட 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை தங்களது நிர்வாக வசதிக்கு ஏற்றவாறு பணியிட மாற்றம் செய்து விஜய் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


banner

Related posts

புஷ்பா பட பாணியில் ஆட்சி.. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இருக்க கூடாது.. சட்டசபையில் தவெகவை தரமான சம்பவம் செய்த உதயநிதி ஸ்டாலின்..

Ambalam News

5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில்.. 10 தொகுதிக்கான பட்டியலை திமுகவிடம் கொடுத்து பரபரப்பை கிளப்பிய இந்திய கம்யூனிஸ்ட்!

Ambalam News

‘’திமுக, தவெகவின் இமேஜை உடைத்து.. அதிமுக இமேஜை மீட்க.. இபிஎஸ் திட்டம்’’.! செப்டம்பரில் மதுரையில் இபிஎஸ்.!

Ambalam News

Leave a Comment