சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் சிபிஐ அழைப்பின் பேரில் விசாரணக்கு சென்றிருக்கிறார் தவெக தலைவர் விஜய். நேற்று சென்னையில் இருந்து டெல்லி கிளம்பிய தவெக தலைவர் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக சிபிஐ அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். சிபிஐ அலுவலகத்தில் தனியாக அமரவைத்து அவரிடம் விசாரணை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. விஜய் ஏற்கனவே கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்றும் நாளையும் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது
இன்று தேர்தல் தேதி அறிவிக்கபட இருக்கும் நிலையில், இன்றும் நாளையும் விஜய்யிடம் விசாரணை நடத்த திட்டமித்திருக்கிறது சிபிஐ. இது வெறும் விசாரணக்கான அழைப்பு மட்டுமல்ல. கூட்டணி குறித்து விசாரணை அமைப்புகள் மூலமாக விஜய்க்கு அழுத்தம் கொடுக்க பாஜக திட்டமிட்டு காய் நகர்த்துவதாகாவே அரசியல் பார்வையாளர்கள் கூறுதுகின்றனர்.
சில ஊடவியலாளர்கள் விஜய் பாஜக அதிமுக கூட்டணியில் ஐக்கியமாவார் என்றே கூறிவருகின்றனர்.

