திருச்சி : காதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தற்கொலை..



திருச்சி செந்தண்ணீர் புரம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் . இவரது மகன் ரஷீத் அகமது (வ 28) இவர் தனபிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது
சம்பவத்தன்று கணவன் மனைவிக்குள் ஏற்ப்பட்ட குடும்ப தகராறில் காதல் மனைவி தனப்பிரியா கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்து விரக்தியில் ரஷீத் அகமது நேற்று வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


banner

Related posts

தெரு நாய்களுக்கு தடுப்பூசி – சென்னை மாநகராட்சி புதிய திட்டம்.. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..

Ambalam News

தவெக – ஓபிஎஸ் – டிடிவி தினகரன் கூட்டணி உறுதி..? 2026 ல் ஆட்சியை பிடிக்கும் திமுக.!!

Ambalam News

இறந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் – தவெக விஜய்

Ambalam News

Leave a Comment