தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் சாய்குமார் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எடப்பாடி முதலமைச்சராக இருந்த போது எடப்பாடியின் தனி செயலாளர்(1) ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல், லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி டேவிட்சனும் மாற்றப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரவை ஏற்று இன்று மாலைக்குள் புதிய பணியிடத்தில் பணியமர்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

