தொகுதி பங்கீட்டுக்கு முன்பே திமுக வேட்புமனு தாக்கல்… பரபரப்பில் புதுச்சேரி அரசியல் களம்


புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி உடன் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் இதுவரை கையெழுத்தாகாத நிலையில் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர். காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படாமல் நீடித்து கொண்டிருக்கிறது. இதனிடையே தொகுதிகள் இறுதியாகாத நிலையில், திமுக வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கி உள்ளது.
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக எம்எல்ஏ சம்பத் சாரம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


banner

Related posts

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் | ஒப்பந்தம் கையெழுத்தானது.!!

Ambalam News

அரசு தாய் சேய் நல மையத்தில் கர்ப்பிணிகளுக்கு போடப்பட்ட ஊசி.. கர்ப்பிணிகளுக்கு உடல் நடுக்கம்..காய்ச்சல்..சீர்காழியில் பரபரப்பு..

Ambalam News

வாக்கு திருட்டு விவகாரம் : பீகாரில் ராகுல் காந்தி யாத்திரை: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

Ambalam News

Leave a Comment