ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் – திட்டவட்டமாக கூறிய ராமதாஸ்


விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் இல்லத்தில் அவரது நாற்காலியில் அதிநவீன ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டதால், தன்னுடைய சோபாவை மாற்றினார் பாமக நிறுவனர் ராமதாஸ். அந்த கருவி லண்டனிலிருந்து வாங்கப்பட்டதாக ராமதாஸ் கூறியிருந்தார். ஒட்டுக்கேட்பு கருவியின் உள்ளே இருந்த லைகா சிம், பேசும்போது மட்டும் ஆன் ஆகும் சிறப்பு வசதி கொண்டது.

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி கடந்த ஜூலை 23 இம் தேதி விழுப்புரம் கிளியனூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பாக புதுச்சேரி கீரனூர் காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் பாமகவினர் புகார் அளித்தனர். கோட்டகுப்பம் டிஎஸ்பி உமாதேவியிடம் பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் ஒட்டுக்கேட்பு கருவியை ஒப்படைத்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டதாக அளித்த புகாரில், ஏடிஎஸ்பி தினகரன் தலைமையிலான போலீசார் அவரது வீட்டில் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து பேசிய ராமதாஸ் தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணியாக மட்டுமே இருக்க முடியும் என்று கூறியுள்ள ராமதாஸ், ஒட்டுக்கேட்பு கருவியை அன்புமணியை தவிர வேறு யாரும் வைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்


banner

Related posts

கமல்ஹாசனின் “சங்கை அறுப்பேன்” – கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ரவிச்சந்திரன் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்

Ambalam News

ராமநாதபுரம் சமஸ்தான ‘’போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்’’ விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

Admin

சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் மீது வழக்கு – மு.க. ஸ்டாலின் கண்டனம்

Admin

Leave a Comment