தொடரும் வரதட்சணை மரணங்கள்….நிதன்யா வை அடுத்து ஜெபிலா மேரி…


கன்னியாகுமரி திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பலதா இவர் செவிலியராக பணிபுரிந்து வந்த தனது மகள் ஜெபிலா மேரியை (26) ஆறு மாதங்களுக்கு முன்பு மேலமிடாலம் பகுதியை சேர்ந்த நிதின் ராஜ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். பத்தாண்டுகள் காதலித்து வந்த இளம் ஜோடிகளுக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண் வீட்டார் வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டாருக்கு 7 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 50 சவரன் தங்க நகை, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை மற்றும் இருசக்கர வாகனம், ஐம்பது லட்சம் ரூபாய்க்கு வீடு என சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் நேற்று மதியம் திடீரென பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் ஜெபிலாமேரி இறந்து விட்டதாக மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்துள்ளனர். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது பெண் உயிரிழந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர்.
முதலில் பெண்ணின் கணவன் வீட்டின் தரப்பிலிருந்து ஜெபிலா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஜெபிலா உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தங்கள் மகளை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அவரிடம் இருந்து 50 சவரன் நகைகளை பெண்ணின் கணவர் நிதின்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் மரிய டேவிட் , அமலோற்பவமம் மேரி உட்பட கணவன் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அபகரித்து விட்டு பெண்ணை அடித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டினர்.
உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து பெண்ணின் உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் திடீரென மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்ணின் கணவர் நிதின் ராஜ் மற்றும் அவரது தாய் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உயிரிழந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க கூறியுள்ளார் . இந்த மரணம் குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


banner

Related posts

விருதுநகர் வெம்பக்கோட்டை வெடிவிபத்து : இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் காயம் அடைந்தவருக்கு 1 லட்சம் நிவாரண தொகை – மு.க. ஸ்டாலின்

Ambalam News

படிக்க வேண்டிய பசங்களை கூப்பிட்டு ரீல்ஸ்… ஸ்டாலின் மீது அண்ணாமலை தாக்கு..தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் அண்ணாமலை திமுகவினர் கடும் விமர்சனம்..

Ambalam News

‘’உங்களுடன் ஸ்டாலின் முகாம்’’ – முதியவர் மீது வருவாய்துறை அதிகாரிகள் போலீஸ் தாக்குதல்.. மாவட்ட ஆட்சியர் விசாரிப்பாரா.?

Ambalam News

Leave a Comment