இஸ்லாமியர்களின் புனிதத்திருநாளான ரமலான் திருநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 1000 பேர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்ப்படுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந் நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய் பேசியதாவது…யார் என்ன அவதூறு பரப்பினாலும் நம்பாதீர்கள். ஆண்டவன் அருளால் நினைத்ததை அடைவோம். அந்த கூட்டணியில் சேரப்போவதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். மதசார்பற்ற கொள்கையில் எந்த சமரசமும் இல்லை. நம்பிக்கையோடு இருங்கள் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்..நாம் எந்த டீமும் இல்லை மக்களின் டீம். தவெக தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று உரையாற்றி இருக்கிறார்

