நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியான சம்பவம் நேபாளத்தில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது.
சமூக ஊடகத் தடைக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம்
இதை தொடர்ந்து நேபாள அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுருக்கிறது. ஊழல் மற்றும் நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக, GEN Z எனப்படும் இளைஞர்களால் ஆன குழுவினரின் இந்த போராட்டமும் கலவரமும் அரசின் நடவடிக்கைகளும் இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதமர் கே.பி.சர்மா ஒலி அறிவிப்பு – சமூக ஊடகங்கள் தடை
நேபாளத்தில் அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை விதிகளுக்கு உட்பட்டு, அந்த நாட்டில் இயங்கும் சமூக வலைதளங் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு அறிவித்தது.

அதைத் தொடர்ந்து அரசு வெளியிட்ட அறிவிப்பில், பதிவு செய்வதற்கு ஏழு நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், நேற்றுடன் அது முடிந்தது. பதிவு செய்யாத சமூக வலைதளங்களான பேஸ்புக், எக்ஸ், யூட்யூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களை நேபாள அரசு தடை செய்தது.
பதிவு செய்யாத சமூக ஊடகங்களை செயலிழக்கச் செய்ய தொலைத்தொடர்பு ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது. தடை செய்யப்பட்ட தளங்களில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப், டிக்டாக், டென்சென்ட், ஸ்னாப்சாட், பின்டெரெஸ்ட் மற்றும் X ஆகியவை அடங்கும். பதிவு செய்யாத வரை தடை தொடரும் எனவும் நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, கடந்த ஜூலையில் ஆன்லைன் மோசடி மற்றும் பணமோசடி அதிகரித்ததால், டெலிகிராம் செயலிக்கு நேபாளம் தடை விதித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்டில், டிக்டாக் நேபாளத்தின் விதிகளுக்கு இணங்க ஒப்புக்கொண்டதால், ஒன்பது மாத தடையை நேபாள அரசு நீக்கியது.
ஊழல் சமூக ஊடக தடை – நேபால் இளைஞர்கள் போராட்டம் இந்நிலையில், சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பதிவு செய்யாத சமூக ஊடகங்களை அரசு தடை செய்தது. இந்நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்ததை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டனர். போராட்டக்காரர்கள் “ஊழலை ஒழி, சமூக ஊடகத்தை அல்ல”, “சமூக ஊடகத்தைத் தடையை நீக்கு”, “ஊழலுக்கு எதிரான இளைஞர்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
போராட்டம் – துப்பாக்கி சூடு
இந்த போராட்டங்கள் GEN Z எனப்படும் இளைஞர் குழுவினரால் முன்னெடுத்து செல்லப்பட்டது. சமூக வலைதளங்களுக்கான தடையை எதிர்த்து ஹமி நேபால் (Hami Nepal) என்ற அமைப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், இன்று காலை 9 மணி முதல் காத்மாண்டுவின் மைதிரிகரில் இளைஞர்கள் ஒன்று கூடினர். போராட்டக்காரர்கள் பெரும் திரளாக தேசியக் கொடியை ஏந்தி, தேசிய கீதம் பாடி நாடாளுமன்ற வளாகத்தை நோக்கிச் சென்றனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடாத வண்ணம் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைக்க முயன்றனர்.
நேபாளத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 250 க்கும் அதிகமானோர் பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு
காத்மாண்டுவின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டம் நேபாளத்தின் பிற முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
பல பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி, வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் நேபாளத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், ஆளும் கே.பி.சர்மா தலைமையிலான அரசு போராட்டங்கள் குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டது
நேபாள் பிரதமர் விளக்கம்
இது தொடர்பாக பேசிய நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, “தடை செய்யப்பட்ட சமூக ஊடக தளங்களில் ஒன்றான X, நேபாளத்தின் இறையாண்மையை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டது.
நாங்கள் ஒன்றரை ஆண்டுகளாக நம் அரசின் விதிகளின்படி, கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் எனச் சொல்லி வருகிறோம். சட்டங்களை மதிக்கவும், பதிவு செய்யவும் கேட்டோம். அவர்கள் அதை புறக்கணித்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது நமது தேசிய இறையாண்மையைக் காக்கும் விஷயம்” எனத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களுக்கான தடை நீக்கம் – காலநீடிப்பு அதே நேரம், நேபாள தகவல் தொடர்பு, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார்.
அதற்குப் பிறகு, “இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டதால், Gen Z-யின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, சமூக ஊடகங்களுக்கான தடையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது” என தெரிவித்தார்.
மேலும், “இந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க, அமைச்சரவை ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அந்தக் குழுவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.
ஐ.நா கோரிக்கை
ஐ.நா. மனித உரிமைகள் அலுவலக செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்டசானி, “நேபாளத்தில் இன்று போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதும், காயமடைந்ததும் எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
இது தொடர்பாக விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்