துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற திமுக அமைச்சரின் மகன் பாஜக அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுப்பு



துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற திமுக அமைச்சரின் மகன் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் இருந்து பதக்கம் பெற மறுத்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவாரக்குடிபட்டியில் தமிழ்நாடு துப்பாக்கி சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தூம் மாநில அளவிளான துப்பாக்கிச் சுடும் போட்டி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி துவங்கிய துப்பாக்கி சுடும் போட்டி வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு துப்பாக்கியால் இலக்கை துல்லியமாக சுட்டு அசத்தி வருகின்றனர். இதில் இதுவரை வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பதக்கங்களை வழங்கினார்.
இந்தப் போட்டியில், டி.ஆர்.பி. ராஜாவின் மகன் சூரிய ராஜபாலுவும் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு அண்ணாமலை பதக்கம் வழங்கினார். ஆனால், அப்போது அண்ணாமலையிடம் இருந்து பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு அண்ணாமலையுடன் நின்று புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டார். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


banner

Related posts

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்..

Admin

அரசின் திட்டங்கள், திட்ட விளம்பரங்களில் முதலமைச்சரின் பெயர் முன்னாள் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தக்கூடாது – சி.வி சண்முகம் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Ambalam News

நகராட்சி அலுவலர், காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல.. என்னிடம் தவறாக நடந்து கொண்டார் – பெண் கவுன்சிலர் போலீசில் புகார்..

Ambalam News

Leave a Comment