வரலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பதிற்கு ஆறுதல் கூறிய தொல்.திருமாவளவன்


சென்னை மாநகராட்சி 13 வது மண்டலம் 195 வது வட்டம், கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மைப்பணியாளர் வரலட்சுமி இன்று அதிகாலை பணியின்போது மழைநீரில் ஏற்பட்ட மின் கசிவினால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழக அரசு வரலட்சுமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை வழங்கியது. மேலும் அவரது உடல் அடக்கம் செய்யும் பொறுப்பை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொண்டார். மின்கசிவு விபத்தில் உயிரிழந்த வரலட்சுமியின் கணவருக்கு பணி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. மேலுமவர்களது குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்றுக்கொள்ளும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது.
தூய்மைப்பணியாளர் வரலட்சுமியின் மரணம் தொடர்பாக பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவவாவன் எம்.பி. இறந்துபோன வரலட்சுமியின் கணவர் குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறி, வரலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


banner

Related posts

மின்சாரம் துண்டிப்பு : தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, ஆதாரத்தை வெளியிட்ட நாகை திமுக..

Ambalam News

தூய்மைப்பணியாளர் வரலட்சுமி மரண விவகாரம் – மின் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமா.? தமிழ்நாடு அரசு..

Ambalam News

திமுக வுக்கு அடுத்த தலைவலி ஸ்டார்ட்.. வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம மரணம்..

Ambalam News

Leave a Comment