வரலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பதிற்கு ஆறுதல் கூறிய தொல்.திருமாவளவன்


சென்னை மாநகராட்சி 13 வது மண்டலம் 195 வது வட்டம், கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மைப்பணியாளர் வரலட்சுமி இன்று அதிகாலை பணியின்போது மழைநீரில் ஏற்பட்ட மின் கசிவினால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழக அரசு வரலட்சுமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை வழங்கியது. மேலும் அவரது உடல் அடக்கம் செய்யும் பொறுப்பை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொண்டார். மின்கசிவு விபத்தில் உயிரிழந்த வரலட்சுமியின் கணவருக்கு பணி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. மேலுமவர்களது குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்றுக்கொள்ளும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது.
தூய்மைப்பணியாளர் வரலட்சுமியின் மரணம் தொடர்பாக பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவவாவன் எம்.பி. இறந்துபோன வரலட்சுமியின் கணவர் குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறி, வரலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


banner

Related posts

கமல்ஹாசனின் “சங்கை அறுப்பேன்” – கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ரவிச்சந்திரன் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்

Ambalam News

ராமநாதபுரம் சமஸ்தான ‘’போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்’’ விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

Admin

‘’மாமூல் வாங்குறதுக்கு.. பிச்சை எடுத்து சாப்பிடலாம்’’ மாமூல் போலீசாருக்கு டோஸ் விட்ட கடலூர் எஸ்பி.ஜெயக்குமார்

Ambalam News

Leave a Comment