போதைபொருள் டீலருடன் நடிகர் கிருஷ்ணா கைது.. சிக்கியது எப்படி


போதைபொருள் டீலருடன் நடிகர் கிருஷ்ணா கைது.. சிக்கியது எப்படி.? சென்னைபோலீஸ்விளக்கம்..

சென்னை: கொகைன் பயன்படுத்திய புகாரில் நடிகர் ஸ்ரீகாந்த் அண்மையில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டடார்.

தீவிர விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியாதோடு நண்பர்களுக்கும் போதை விருந்து அளித்த நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவும் , போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, விற்பனை செய்யும் கெவினும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை மாநகர போலீசார் வெளியிட்ட அறிக்கையில், போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தி நண்பர்களுக்கும் அளித்த நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவும் , போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, விற்பனை செய்யும் கெவினும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளனர். “போதைப்பொருள் டீலர் கெவின் உடனான உரையாடல் (chat) மூலம் சிக்கிக்கொண்டுள்ளார் கிருஷ்ணா.

இவ்வழக்கு தொடர்பாக நடந்த விசாரணை தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் , ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை நடந்தது. இதன் அடிப்படையில் ஜெஸ்விர் என்ற கெவின் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்துகொக்கைன் 0.5 கிராம்மெத்தம்பெடமைன்- 10.30 கிராம்எம்டிஎம்ஏ 02.75 கிராம்ஓஜி கஞ்சா -2.40 கிரம்கஞ்சா -30 கிராம்எடை இயந்திரம் 2லேப்டாப்-1மொபைல்போன் -1 ரூ.45,200 ரொக்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் குழு ஸ்ரீகிருஷ்ணா, கெவினிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதுடன், அதனை நண்பர்களுக்கு பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து அது தொடர்பாக கருத்து பரிமாற்றங்கள், போதைப்பொருள் உட்கொள்ளும் இடம், நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார். இவர்களுடைய வங்கி பணிபரிவர்த்தனை மற்றும் இதுவரை பயன்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது” இவ்வாறு சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Related posts

கொங்கு மண்டலத்தில் ஆரம்பிக்கும் தேர்தல் சுற்றுப்பயணம். எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு சென்ட்டிமென்ட் கைகொடுக்குமா?

Ambalam News

சாதிவாரி கணக்கெடுப்பு பிரதமர் மோடி அடிபணிந்துள்ளார் – மு.க. ஸ்டாலின்

Admin

நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்தம்.. பேருந்துகள் இயங்குமா.?

Ambalam News

Leave a Comment