சங்ககிரி அருகே பேருந்தில் 3 கிலோ நகை கொள்ளை..போலீசார் விசாரணை..


திருச்சியில் காரில் வந்த நகைக்கடை மேலாளரின் காரை பின் தொடர்ந்து வந்த கொள்ளையர்கள் மிளகாய்ப்பொடி தூவி, 10 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற நிலையில், தனிப்படை அமைத்து திருச்சி போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் இருந்து நேற்று இரவு, 10.30மணிக்கு, ஆம்னி பஸ் ஒன்று 24 பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்டுள்ளது. இரவு 12.45 மணியாளவில் சேலம் மாவட்டம் சங்ககிரி வைகுந்தம் டோல்கேட் அருகே பஸ் இப்பேருந்து வந்தபோது, பயணிகள் டீ குடிப்பதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது பயணிகள் டீ குடிக்க பேருந்தை விட்டு இறங்கிய நிலைல், சங்ககிரி அருகே வைகுந்தம் டோல்கேட்டில், நேற்று நள்ளிரவு, சொகுசு ஆம்னி பேருந்தில், பயணி ஒருவரின் 3 கிலோ தங்ககட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஈடு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரியைச் சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் (45), மணிவண்ணன்(40). இருவரும் தனியார் சொகுசு ஆம்னி பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர்..
கோவையில் இருந்து நேற்று இரவு, 10.30மணிக்கு, ஆம்னி பஸ் ஒன்று 24 பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்டுள்ளது. இரவு 12.45 மணியாளவில் சேலம் மாவட்டம் சங்ககிரி வைகுந்தம் டோல்கேட் அருகே பஸ் இப்பேருந்து வந்தபோது, பயணிகள் டீ குடிப்பதற்காக நிறுத்தப்பட்ட போது, சொகுசு பஸ்ஸில் பயணம் செய்த கோவையைச் சேர்ந்த சங்கர் (45) என்பவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று டீ குடித்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து தனது இருக்கையில் அமர்ந்துள்ளார்.
அப்போது இவரது லக்கேஜ் பேக் மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர், ‘தான் கொண்டு வந்த பையில் 3 கிலோ தங்க கட்டிகளை வைத்திருந்ததாகவும், அந்த பேக் மாயமாகிவிட்டதாகவும்’ பஸ் ஓட்டுநர்கள் மற்றும் அங்கிருந்த பயணிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சங்ககிரி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். சங்கர் என்பவர் கோவையில் உள்ள சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான தங்க நகை செய்யும் பட்டறையில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார். நேற்று நகைகள் விற்பனை செய்வதற்காக, கோவையில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் 3 கிலோ நகையுடன் வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் பஸ்சில் இருந்த பயணிகள், ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அதே பேருந்தில், விஜிபாபு என்ற வாலிபர் கோவையில் பஸ்சில் ஏறியுள்ளார். சங்கர் அமர்ந்திருந்த சீட்டுக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். வைகுந்தம் டோல்கேட்டில் பஸ் டீ குடிக்க நிறுத்தப்பட்ட போது விஜிபாபு மட்டும் மாயமாகி உள்ளார்.
இதனால் போலீசாருக்கு அந்த வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த சங்கரை பின்தொடர்ந்து வந்த நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா.? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சங்ககிரியில் 3 கிலோ தங்கம் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


banner

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாறுகிறதா.? – காவல்துறை மீது தொடரும் நீதிமன்ற விமர்சனங்கள்..

Ambalam News

அன்பில் மகேஷ் பொய்யாமொழி V/s கே.என்.நேரு.!? திருச்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் வெளிநடப்பு..

Ambalam News

ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் – திட்டவட்டமாக கூறிய ராமதாஸ்

Ambalam News

Leave a Comment