“சுதந்திர தின நிகழ்ச்சியை புறக்கணித்த ராகுலின் செயல் வெட்கக்கேடானது – கடுமையாக சாடிய ஷேசாத் பூனவல்லா



டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்காதது வெட்கக்கேடான செயல் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசிய கொடி ஏற்றிய நிகழ்ச்சியை ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் புறக்கணித்தது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, தனது எக்ஸ் தளத்தில், ராணுவத்தையும், அரசியல் அமைப்பையும் ராகுல்காந்தி அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தானை விரும்புவதாகவும் தேசத்தையும் காந்தியையும் ராகுல்காந்தி அவமதித்து விட்டதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


banner

Related posts

பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Ambalam News

வரலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பதிற்கு ஆறுதல் கூறிய தொல்.திருமாவளவன்

Ambalam News

‘’உங்களுடன் ஸ்டாலின்’’ முகாமில் அதிகாரிகளுடன் அடிதடி – சிகிச்சையில் இருப்பவரை கைது செய்ய போலீஸ் தீவிரம்.?

Ambalam News

Leave a Comment