வெளி மாநில மதுபாட்டிகள் காரில் கடத்தல் – காரை கைப்பற்றி போலீசார் விசாரணை


திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியில் பேரளம் காவல்நிலைய போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக, சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய முயற்சித்தபோது, காரை நிறுத்தி விட்டு டிரைவர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபரும் தப்பியோடி விட்டனர். இதையடுத்து அந்த காரில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், 750 மி.லி அளவுடைய 600 பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து 600 மதுபாட்டில், மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலீசார் வழக்குப் பதிந்து வெளிமாநில மது பாட்டில் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார்,? காரின் உரிமையாளர் யார்.? மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்த கடை உரிமையாளர் யார்.? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.


banner

Related posts

விநாயகர் சிலை ஊர்வலம் – கள்ளக்குறிச்சியில் இந்து முன்னணி பொதுமக்கள் இடையே மோதல்

Ambalam News

செங்கோட்டையன் அடுத்த மூவ்.. 9 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு.!?

Ambalam News

ஆம்புலன்ஸை தடுத்த விவகாரம்… இபிஎஸ் மீது புகார் – 5 பேர் மீது வழக்குப்பதிவு..

Ambalam News

Leave a Comment