கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல்வராக இருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது அவரது வீடு மற்றும் ;அலுவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து முதல்வர் பினராயி விஜயன் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர் இச் சம்பவம் குறித்து முதல்வர் அலுவலகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் வீடு மாற்று அலுவலகங்கள் மட்டுமின்றி திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்ப்து குறிப்பிடத்தக்கது.
அனைத்து இடங்களிலும் தீவிர சோதனைகள் நடந்து வருவதாக தெரிகிறதது.